எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை தேய்பிறை ஏகாதசியில் விரதம் இருந்து மறுநாள் துவாதசி அன்று காலை நடைபெறும் முதல் பூஜையில் கலந்துக்கொண்டு தீர்த்தம், துளசி ப்ரசாதங்களை சாப்பிட்ட பிறகே உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவேண்டும் அம்பரிஷன் என்ற மகாராஜா இந்த விரதம் இருந்து பகவானின் அருளை பெற்று சக்ராயுதத்தை உன்னுடைய தற்காப்புக்கு வைத்துக்கொள் என்று கொடுத்தார் என்று புராணக்கதைகளில் கூறப்பட்டுள்ளது ஆகையால் நாமும் இந்த விரதத்தை பக்தியுடனும் சிரத்தையுடனும் செய்தால் திருமாலின் அனுக்ரஹம் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும்.